29th August 2022 15:53:46 Hours
புத்தளத்தில் உள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படையினர் புதிதாக பதவி உயர்வு பெற்ற அப்படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்கள், இராணுவத் தளபதியிடமிருந்து புதிய சின்னங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஓகஸ்ட் 24 அன்று தலைமையக வளாகத்தில் இராணுவ மரபுகளுக்கு அமைவாக மரியாதைகளை வழங்கி அவரை வரவேற்றனர்.
6 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் இராணுவத்தின் சம்பிரதாயமாக நுழைவாயிலில் ஒரு காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையை செலுத்தப்பட்டது.
மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்கள் 58 வது படைப்பிரிவில் தனது படையினர் மத்தியில் உரையாற்றியதுடன், அன்றைய நிகழ்வுகளின் முடிவைக் குறிக்கும் வகையில் அனைத்து படையினருக்குமான தேநீரில் உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 58 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.