26th August 2022 07:21:27 Hours
இலுப்பக்கடவை, அந்தோணிபுரம், முண்டம்பிடி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன், 54 வது படைப்பிரிவின் படையினர் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இலுப்பக்கடவை மகா வித்தியாலய வளாகத்தில் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வழங்கினர்.
நாவல கொஸ்வத்தையைச் சேர்ந்த திரு ரொமேஷ் மற்றும் திருமதி மைக்கல் உபயசிறி ஆகியோர் 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க முன்வந்தனர்.
542 வது பிரிகேட் தளபதி, 54 வது படைப்பிரிவின் கேணல் ( ஒருங்கிணைப்பு) அதிகாரி, 12 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், உதவி வலய கல்விப் பணிப்பாளர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த விநியோகத்தில் கலந்து கொண்டனர்.