24th August 2022 07:11:03 Hours
இரத்த வங்கி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக 513 வது பிரிகேட், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி , 16 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து யாழ். தெல்லிப்பளை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்காக இரத்த தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி இந்த மனிதாபிமான செயற் தி்ட்டத்தின் போது 84 தொகுதிகளுக்கு அதிகமான இரத்தம், இரத்த வங்கி மூலம் சேகரிக்கப்பட்டது. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 51 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் 513 வது பிரிகேட் தளபதி கேணல் மொஹமட் ராசிக் இது தொடர்பான முயற்சியை (20) சனிக்கிழமை மேற்கொண்டார். டொக்டர் ஆர்.எம். குரு மற்றும் தெல்லிப்பளை இரத்த வங்கியின் பணியாளர்கள் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்தம் தட்டுப்பாடு காரணமாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
இத்திட்டத்தின் முடிவில் மருத்துவ ஊழியர்கள் பிரிகேட் தளபதியின் முயற்சிகளுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.