22nd August 2022 18:43:49 Hours
அண்மையில் பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்கள், கொஸ்கமவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையின் பிரதி தளபதியாக புதன்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வின் போது பதவியேற்றார்.
இராணுவத் தொண்டர் படை தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய பிரதி தளபதிக்கு ஒரு காவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர், மகா சங்கத்தினரின் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் துசித சில்வா தனது புதிய நியமனத்தை சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
மேஜர் ஜெனரல் துசித சில்வா இப்புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையின் பயிற்சி பரிசோதகராக கடமையாற்றி வந்தார். இவரின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் பதவி நிலை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.