19th August 2022 20:30:16 Hours
அம்பாந்தோட்டை 12 வது படைப்பிரிவு தலைமையகம் ருஹுனு மகா கதிர்காமம் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘எசல பெரஹெர’வை சுமூகமாக நடத்துவதற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது. மேலும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 9 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளையின் கீழுள்ள படையினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதிகாரிகள் முறையே அரச நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆதரவை வழங்கினர்.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் பணிப்புரையின் பேரில், 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் ‘எசல பெரஹர’ தொடர்பான அனைத்து விடயங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்தார்.