19th August 2022 21:04:16 Hours
முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இராணுவத்தின் மேலும் ஒன்பது சிரேஷ்ட பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கை பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் ஷெவந்த் குலதுங்க, 23 வது படைப்பிரிவின் தளபதி இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் மிஹிது (பெரேரா வெளிநாட்டு பாடநெறி), 58 வது படைப்பிரிவின் தளபதி விசேட அதிரடிப் படையணியின் பிரிகேடியர் விபுல இஹலகே, இலங்கை இராணுவ போர்க் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியின் பிரிகேடியர் இந்திரஜித் விதானச்சி, பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் மஞ்சுள காரியவசம், 57 வது படைப்பிரிவின் தளபதி விசேட அதிரடிப் படையணியின் பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், 21 வது படைப்பிரிவு தளபதி விசேட படையணியின் பிரிகேடியர் நிஷ்யங்க எரியகம, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கடமையிலிள்ள விசேட அதிரடிப்படையின் பிரிகேடியர் மஹிந்த ரணசிங்க மற்றும் கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் வஜிர வெலகெதர (வெளிநாட்டுப் பாடநெறி) ஆகியோர் இவ்வாறு மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டதாக இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவச் செயலகம் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்துள்ளது.