22nd August 2022 18:20:16 Hours
இராணுவ சம்பிரதாயங்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் வழங்கும் வகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று (19) காலை முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களை முதல் முறையாக மரியாதை நிமித்தம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமான விஜயத்தின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், நாட்டின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஜனநாயக செயல்முறை, அரசியலமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தின் உயர்ந்த அர்ப்பணிப்பை உறுதி செய்தார்.
சமகால சவால்களை எதிர்கொள்ள இலங்கை இராணுவத்தின் தற்போதைய தயார்நிலை குறித்தும் இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.
சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், புதிய ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமாக செழுமையைக் குறிக்கும் 'புண்கலச' மாதிரி ஒன்றை வழங்கினார்.