18th August 2022 15:58:47 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையின் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் , பரிந்துரைக்கமைய 'ஒழுக்கத்தின் ஊடாக நிதி முகாமைத்துவம்' பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இலங்கை இராணுவத் தொண்டர் படை பல்செயல்பாட்டு மண்டபத்தில் ஓகஸ்ட் 10 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டின் புகழ்பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றான ஹட்டன் நெஷனல் வங்கியானது அன்றைய வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு மனித வளங்களை வழங்கியுள்ளதுடன், இந்த விரிவுரையை ஹட்டன் நெஷனல் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் திரு பிரியங்கர ஜயரத்ன நடாத்தினார்.
இந்த நிகழ்வில் சிறந்த ஒழுக்கத்துடன் ஊதியங்களை நிர்வகிப்பதில் நிதி கல்வியறிவு தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன் தற்போதைய சவால்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது தொடர்பாக சுட்டிக் காட்டப்பட்டது. மேலும், செலவு முகாமைத்துவம் மற்றும் மாதாந்த வருமானத்தை உயர்த்தக்கூடிய பிற சாத்தியமான முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் செயலமர்வில் கலந்துகொண்டது.