18th August 2022 16:09:31 Hours
ஊடகம் மற்றும் இராணுவத்துடனான அதன் ஒத்துழைப்பு தொடர்பான படையினரின் அறிவை மேம்படுத்தும் முகமாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்களினால் ரத்மலானையில் உள்ள இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தில் புதன்கிழமை (17) 'ஊடகம் மற்றும் இராணுவம்' என்ற தலைப்பில் விரிவுரை நடாத்தப்பட்டது.
இந்த விரிவுரையில் ஊடக அறிமுகம், சமூகத்தின் மீதான படையினரின் பொறுப்புகள், பொதுக் கருத்து தலைமைத்துவம், ஊடகம்-இராணுவ உறவு, சமூக ஊடக ஒழுக்கம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மற்றும் பொதுமக்களுடன் பொறுப்புடன் அனுகும் முறை, நேர்மறையான அணுகுமுறைகள் மூலமான சமூக மேம்பாடு, பொதுமக்களின் பொதுவான மனநிலை போன்றவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும், குறிப்பாக இந்த தீர்க்கமான மற்றும் பொருளாதார நெருக்கடி சூழலில் இலங்கை இராணுவத்தின் நன்மதிப்பை மேம்படுத்த ஊடகங்களையும் பொதுமக்களையும் நிர்வகிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக இந்த விரிவுரையின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பக பணிப்பாளர் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.