18th August 2022 15:49:58 Hours
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளின் வழங்கள் மற்றும் நிர்வாகம் பற்றிய அறிவை மேலும் மேம்படுத்தும் வகையில் மின்னேரியாவில் உள்ள கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேலும் ஒரு புதிய பாடநெறி ஓகஸ்ட் 15 அன்று மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியில் ஆரம்பமானது.
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகம், கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி, படைப்பிரிவுகள், பிரிகேட்கள் பயிற்சிப் பாடசாலைகள், படையலகுகள் மற்றும் படையணிகள் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 29 அதிகாரிகள் இந்த நான்கு நாள் பாடநெறியில் பங்கேற்கின்றனர். கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதி மேஜர் ஜெனரல் சுதத் ரத்நாக்க அவர்களின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி வழங்கியுள்ளார்.
கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் கேணல் அதிகாரி, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.