18th August 2022 15:55:18 Hours
முதலாவது படையணித் தலைமையகத்தின் 58 வது படைப்பிரிவின் கீழுள்ள 582 வது பிரிகேடின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹொரணை பிரிகேட் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளின் உணவகத்தினை 582 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த நவரத்ன அவர்கள் ஓகஸ்ட் 2 ஆம் திகதி திறந்து வைத்தார்.
582 வது பிரிகேட் படையினர் தமது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி குறித்த நாட்களுக்கு முன்பே நிர்மாணிப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்தனர். 582 வது பிரிகேட் தளபதி ரிப்பன் நாடவை வெட்டி பால் பானை கொதிக்கும் சடங்குகளுக்கு மத்தியில் உணவகத்தினை திறந்து வைத்து புதிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்.
இந்த நிகழ்வில் பிரிகேட் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.