17th August 2022 17:30:08 Hours
தனது விஜயத்தின் போது அனுராதபுரம் தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளருடன் அவர் சுமுகமாக கலந்துரையாடியதுடன் பயிற்சி மையத்தின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர், இதில் பாடநெறிகள், பாடத் திட்டங்கள் மற்றும் பிற நிர்வாக தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன.
பின்னர், வருகை தந்த பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் மாணவர்களின் வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன் மாணவர்களின் கற்றல் மற்றும் செயல்முறை அமர்வுகளை உன்னிப்பாகக் கவனித்தார்.
பின்னர், அன்றைய வருகையின் நினைவாக பயிற்சி மையத்தின் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடுவதற்காக பயிற்சி மையத்தின் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.எஸ் பிரேமவன்ஷ அவர்கள் வருகை தந்த பிரிகேடியர் கபில டோலகே அவர்களை அழைத்தார்.