15th August 2022 18:00:56 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேட் படையினர், 12 வது படைப்பிரிவு புலனாய்வுப் படையினர் மற்றும் வெல்லவாய பொலிஸ் நிலைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை (14) வெல்லவாய, அலுத்வெல பிரதேசத்தில் இருந்து சுமார் 7000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை முற்றுகையிட்டுள்ளனர்.
12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபாலவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாரின் பங்களிப்புடன் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.