16th August 2022 16:22:37 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் தீகவாப்பிய ரஜமஹா விகாரை, புனிதப் பகுதி மற்றும் அதன் தூபி புனரமைப்பு தொடர்பான நிர்மாணப் பணிகளை சனிக்கிழமை (6) மேற்பார்வையிட்டார்.
கிழக்கு தளபதி தனது விஜயத்தின் போது, தூபியின் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்டதுடன், அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர், இத்திட்டத்தை வெற்றிகரமான கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் கட்டுமானப் பொருட்கள், மனிதவளம் ஆகியவற்றின் தேவைகளை அவர் நெருக்கமாக மதிப்பீடு செய்ததுடன், செங்கல் உற்பத்தி செய்யும் பிரிவையும் பார்வையிட்டு, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
இலங்கை பொறியியலாளர் மற்றும் பொறியியலாளர் சேவை படையணியை சேர்ந்த படையினர் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாளர்களுடன் இணைந்து தற்போது புனரமைப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருகை தந்த கிழக்கு தளபதியுடன் 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, தீகவாப்பிய புனரமைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் உதய கூங்கஹப்பிட்டிய, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.