13th August 2022 18:19:43 Hours
வியாழக்கிழமை (11) எம்பிலிப்பிட்டிய பிரதான பஸ் நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள சுமார் 20 கடைகளுக்குள் ஏற்பட்ட தீயை அணைக்க குட்டிகலவிலுள்ள இலங்கை இராணுவ தொழிற்பயிற்சிப் பாடசாலை படையினர் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 28 இராணுவத்தினர் செவனகல தீயணைப்பு மீட்புப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலம் போராடி தீ பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை முற்றாக அணைத்தனர்.