31st July 2022 15:15:59 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் பிளாட்டூன் ஆயுதப் பாடநெறி- இல 18 ஐ நிறைவு செய்த 31 சிப்பாய்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
இந்த பயிற்சியின் போது ஆயுதங்களைக் கையாளுதல், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதோடு, பல நடைமுறை பயிற்சி அமர்வுகளும் நடத்தப்பட்டன.
நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சி.ரணவீர அவர்கள் கலந்து கொண்டு பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த பாடநெறியில் சிறந்த மாணவராக 4 வது விசேட படையணியின் கோப்ரல் டபிள்யூ.எம்.பி.எஸ் வீரசிங்க தெரிவு செய்யப்பட்டார்.