31st July 2022 15:18:51 Hours
கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் கொமாண்டோ வீரர்களின் உடல் தகுதி மற்றும் உடல் வீரியத்தை மேம்படுத்தும் நோக்கில், புனரமைக்கப்பட்ட 'Maroons' ஸ்குவாஷ் மைதானம் மற்றும் 'கெப்டன் ஜே.எஃப்.எஸ். டி பொன்சேகா' நினைவு உடற்பயிற்சி கூடம் ஆகியன செவ்வாய்கிழமை (26) நடைபெற்ற விழாவின் போது கொமாண்டோ வீரர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.
முதலாம் படையணியின் தளபதியும் கொமாண்டோ படையணியின் தளபதியுமன மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட அன்றைய பிரதம அதிதி, கட்டிட புனரமைப்புக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்பைப் பாராட்டினார்.
கொண்டோ படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் பி.எம்.கே.கே தர்மவர்தன, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.