25th July 2022 18:30:14 Hours
இராணுவ பரா பீச் கரப்பாந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீரர்கள், விசேட படையணி வீரர்களை தோற்கடித்து சாம்பியன்ஷிப்பினை தனதாக்கிக் கொண்டதோடு, விசேட படையணி வீரர்கள் இரண்டாமிடத்தையும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
இலங்கை பொறியியலாளர் படையணியின் ஏற்பாட்டில் ஜூலை 23 முதல் 24 வரை, பனாகொட 1 வது கள பொறியியலாளர் பீச் கரப்பந்தாட்ட மைதானத்தில் படையணிகளுக்கிடையிலான இராணுவ பரா பீச் கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது இராணுவத்தின் 23வது பரா போட்டி 2022 உடன் ஆரம்பிக்கப்பட்டது.
இராணுவ பரா பீச் கரப்பாந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீரர்கள், விசேட படையணி வீரர்களை தோற்கடித்து சாம்பியன்ஷிப்பினை தனதாக்கிக் கொண்டதோடு, விசேட படையணி வீரர்கள் இரண்டாமிடத்தையும்இலங்கை பொறியியலாளர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட்டனர்.
இறுதிப் போட்டியில் பின்வரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
சிறந்த அமைப்பு வீரராக – பணி நிலை சார்ஜென் எம்.டபல்யூ பிரியங்கர (இலங்கை இலேசாயுத காலாட் படையணி)
சிறந்த தாக்குபவர் - சார்ஜென் எச்.எம்.எஸ் பண்டார (விசேட படையணி)
சிறந்த வீரராக - கோப்ரல் ஜீ.கே.டி கமகே (இலங்கை இலேசாயுத காலாட் படையணி)