Header

Sri Lanka Army

Defender of the Nation

26th July 2022 15:13:25 Hours

படையினரால் பௌத்த துறவியின் ஒத்துழைப்புடன் உயிலங்குளத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 651 வது பிரிகேடின் கீழுள்ள 17 (தொ) வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் துணுக்காய் பிரதேசத்தின் திரங்கண்டல் கிராம உத்தியோகத்தர் பிரிவின் உயிலங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மிகவும் தகுதியான குடும்பங்களுக்கு 34 உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் வண. தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரரால் குறித்த நிவாரணப் பொதிகளுக்கான அனுசரணை வழங்கப்பட்டது.

651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார அவர்களின் அழைப்பின் பேரில் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் புதன்கிழமை (20) அந்த உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதோடு, 65 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.டி.யு.டி குமார , 17 (தொ) வது

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.ஏ.என்.பீ அதுரகிரி மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்து கொண்டனர். 17 (தொ) வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்கள் இந்த விநியோக ஏற்பாட்டை செய்தனர்.