Header

Sri Lanka Army

Defender of the Nation

26th July 2022 15:16:06 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பு மூலம் மேற்கு மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கள்

தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் வண. தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர் அவர்கள் சிங்கப்பூரின் 'Tan Nagak Buay and Kee Meng Lang Foundation' உடன் இணைந்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 144 வது பிரிகேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்றாம் கட்டமாக மேலும் 204 உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இதன்படி, இராணுவத்தினரின் ஊடாக அந்த 204 உலர் உணவுப் பொதிகள் உட்பட மேற்கு மாகாணத்தில் மாத்திரம் மொத்தம் 42,500 உலர் உணவுப் பொதிகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த 204 உலர் உணவுப் பொதிகள் பெகிரிவத்தை, எம்புல்தெனிய பகுதிகளில் உள்ள வரிய மக்களுக்கு பகிர்ந்தழிக்கப்பட்டதுடன் இத்திட்டமானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின்படி 144 வது பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ளிக்கிழமை (22) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நன்கொடையாளர்கள் கொழும்பிலும் அதன் நகர்ப் பகுதிகளிலும் உள்ள வரிய குடும்பங்களுக்கு மேலும் 1500 உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

அந்த 204 உலர் உணவுப் பொதிகள் பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு முன்னிலையில் பெகிரிவத்தை விவேகராம விகாரையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.