30th June 2022 14:32:34 Hours
யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் இலங்கை பொறியியலாளர் படையணியின் 21 படைத் தளபதியாக 2022 ஜூன் மாதம் 23 அன்று நடைபெற்ற ஒரு சுருக்கமான விழாவின் போது இலங்கை பொறியியலாளர் படையணியின் தலைமையகத்தில் பதவியேற்றார்.
இதன் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் அவருக்கு இராணுவ சம்பிரதாய மரியாதைகள் வழங்கப்பட்டதுடன் இலங்கை பொறியியலாளர் படையணியின் தலைமையகத்திற்கு வருகை தந்த அன்றைய பிரதம அதிதியை, நிலைய தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும அன்புடன் வரவேற்றதுடன், அவருக்கு காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாய்நாட்டின் சார்பில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவு தூபியிற்கு தளபதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அன்றைய பிரதம அதிதி இராணுவத்தின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தனது புதிய அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டார்.
படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களால் 'செத்பிரித்' பரயாணங்களில் புதிய நியமனத்திற்கு ஆசி வழங்கப்பட்டது.
புதிய தளபதியினால் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுவதற்கு முன், அதிகாரிகளின் உணவகத்தில் அனைத்து படையினர்களுடன் ஒரு கலந்துரையாடலின் போது தனது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். இலங்கை பொறியியலாளர் படையணியின் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிப்பாய்களும் ஜூம் தொழிநுட்பத்தின் ஊடாக நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.