29th June 2022 14:14:35 Hours
படையினர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) சான்றிதழை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் விசேட கலந்துரையாடல் அண்மையில் கொஸ்கம இராணுவ வழங்கல் கட்டளையில் இடம்பெற்றது.
இராணுவத் வழங்கல் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், நாடளாவிய ரீதியில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலைகளின் கட்டளைத் தளபதிகளுடன் இணைந்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அங்கு இராணுவ பயிற்சி வீரர்களின் பிரத்தியேக தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு அங்கீகாரத்தை பெறிவதற்காக தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் திறமையான இராணுவ பயிற்சி வீரர்களின் NVQ சான்றிதழை வழங்குவது, குறிப்பாக ஓய்வு பெற்ற பின்னர், அவர்களின் தொழில்நுட்ப அறிவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இராணுவ வீரர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கக் கூடியதாக அமையும் என்பதற்காக கலந்துரையாடினார்.
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் திரு தரங்க நிலம் கம்லத், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தொழில்துறை விவகார பணிப்பாளர் மேஜர் பிரசன்ன சந்திரசிறி (ஓய்வு), தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் திட்டமிடல் பணிப்பாளர் திரு ரொஹான் ரொட்ரிகோ, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் பிரதி தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பொறியியலாளர் மஹிந்த ரூபசிங்க, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திரு எம். ஜெயசிங்க, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர். திரு எம். நிஷாந்த மற்றும் சில அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.