21st June 2022 11:58:30 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 11 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணி படையினர் (14) பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன் பொசன் பௌர்ணமி தினத்தில் ‘போதி பூஜையினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அம்பாறை ஸ்ரீ ஷைலத்தலாராம ஆலயத்திலும், தீகவாபிய ஆலயத்தை வழிபட வந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எரகம இராணுவ முகாம் முன்பாக படையினரால் கொத்தமல்லி மற்றும் வில்வ பூ நீர் ஆகியவை தாகம் தீர்க்கும் நோக்குடன் படையினரால் வழங்கப்பட்டது.
தீகவாபிய விகாரைக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 2500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெலிமல் பானத்தை அருந்தினர். நீத்தா ஷைலத்தலாராம விகாரையில் நடைபெற்ற அன்னதானம் மற்றும் போதி பூஜா நிகழ்வில் பெருமளவிலான படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீத்தா ஸ்ரீ சைலத்தலாராம ஆலயத்தின் பிரதம பிக்கு சொற்பொழிவை நிகழ்த்தியதுடன், பிரதேசத்தில் படையினர் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.