18th June 2022 12:13:24 Hours
மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்கள், 11 ஜூன் 2022 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத்தின் 13 வது தலைமை களப் பொறியியளாலராக பதவியேற்றுக் கொண்டார்.
அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தலைமை களப் பொறியியளாலர் மத வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன், இவர் பொறியியளாலர் பிரிவின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது யாழ். பாதுகாப்புப் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சன்ன விஜயசுந்தர அவர்களுக்கு பதிலாக இவர் இப்போது குறித்த நியமனத்தை பொறுப்பேற்றுள்ள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் களப் பொறியியளாலர் அலுவலகப் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.