Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2022 19:07:27 Hours

நாடளாவிய ரீதியிலுள்ள தளபதிகளுக்கு இராணுவ தளபதியின் கன்னி உரை

நாடளாவிய ரீதியிலுள்ள கட்டளை தளபதிகளுக்கான கன்னி உரையை புதிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதன்கிழமை (15) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் முதன்மை பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்பு படைத் தளபதிகள், முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளி்ன் தளபதிகள், படைப்பிரிவுத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், படையினருக்கான பயிற்சி பாடசாலைகளின் தளபதிகள் உள்ளடங்களாக படையலகு தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி உரையில் இராணுவ தளபதியவர்கள் தமது செயற்றிட்டம், தூரநோக்கு திட்டங்கள், மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் விவசாய செயன்முறைகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.

அத்தோடு அரசாங்கத்தின் உணவு உற்பத்தித் திட்டத்திற்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக விவசாயிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அவற்றுக்காக இராணுவத்தின் நிபுணத்துவ, இயந்திர பங்களிப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் தளபதியவர்கள் வலியுறுத்தினார்.

அதிகாரிகளுக்கான உரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்த தளபதியவர்களுக்கு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, சூம் தொழில்நுட்பத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள படைப்பிரிவுகளுக்கு இராணுவத தளபதியவர்களின் உரை ஔிபரப்பட்டது.