Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2022 10:05:43 Hours

படையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பகிர்ந்தளிப்பு

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வண தலகல ஸ்ரீ சுமணரதன தேரர் தலைமையிலான தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை வழங்கிய நிதி உதவியை கொண்டு, மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிகழ்வொன்று 01 ஜூன் 2022 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம மற்றும் சுனேத்திரர்மா விகாரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின் போது ஒவ்வொன்றும் ரூபா. 1500.00 பெறுமதியான பொதிகள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

231 வது பிரிகேடின் 11 (தொ) இலங்கை சிங்கப் படையணியினரால் மட்டக்களப்பு கெமுனுபுர மற்றும் கச்சக்குடி கிராம சேவகர் பிரிவு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த விநியோக திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் 213 வது பிரிகேட் தளபதி, சிவில் விவகார அதிகாரி, 11 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை 231 வது பிரிகேடின் கீழுள்ள 11 (தொ) இலங்கை சிங்கப் படையணியினர் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலூப பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் (14) இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது சின்னவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு தலா 5000/= பெறுமதியான 80 உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்தனர். பஹரைன் நாட்டில் பணியாற்றும் நன்கொடையாளரான திரு சுரங்க புஸ்பகுமார அவர்களின் நிதி உதவியை கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலூப பண்டார, 231 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் மஞ்சுள தர்மசேன, 1 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினரும் மேற்படி சமூகப் பணியில் பங்கேற்றனர்.