14th June 2022 17:36:23 Hours
ஆறு மாதங்களுக்கும் மேலாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் , இராணுவ தொண்டர் படையின் புதிய தளபதியாக பதவியேற்கவிருக்கும் நிலையில் 12 ஜூன் அன்று யாழ். தளபதியின் கடமைகளிலிருந்து விடுகை பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறும் முன்னதாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் 51, 52 மற்றும் 55 படைப்பிரிவுகளின் படையினருக்கான உரையொன்றை நிகழ்த்தியிருந்ததோடு, தனது பதவிக்காலத்தில் யாழ். குடாநாட்டிற்குள் அமைதியை பேணுவதற்கு அவசியமான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சகலருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 12 வது கெமுனு ஹேவா படையணியினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய காலத்தில் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருந்தார். இத்திட்டங்கள் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நம்பிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியாக இருந்து விடுகை பெற்றுச் செல்லும் தளபதியவர்கள் அவரது 35 வருட சேவைக்காலத்தில் சிறந்த இராணுவ வீரர் , இராஜதந்திரி, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் செயற்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.