11th June 2022 16:47:55 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 18 வது (தொ) கெமுனு ஹேவா படையணியினரின் உதவியுடன் வியாழக்கிழமை (9) வத்தேகம, தெலபோகல பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 745 கஞ்சா செடிகளை பொலிஸார் முற்று கை யி ட் டனர்.
படையினரும் மொனராகலை பொலிஸாரும் 2 அடி 3 அங்குல உயரம் கொண்ட அந்த செடிகளை கண்டறிந்து அவற்றை அழித்துள்ளனர். 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால மற்றும் 18 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை