12th June 2022 18:30:58 Hours
காங்கேசன்துறையிலுள்ள வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் புதிய தளபதியாக இலங்கை பொலிஸ் படையணியின் பிரிகேடியர் கிளிபர்ட் டி சொய்சா செவ்வாய்க்கிழமை (09) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பதவிநிலை அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
அதனையடுத்து வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதியாக பதவியேற்றதன் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.