09th June 2022 14:09:16 Hours
மாலியில் உள்ள ஐநா (MINUSMA) குழு படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் கார்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சென் ,சமீபத்தில் மாலியில் நிறுவப்பட்டுள்ள ஐநா இலங்கை அமைதிகாக்கும் முகாமிற்கு அதன் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் முகமாக விஜயம் செய்தார். குறித்த விஜயத்தை அவர் பமாகோவில் இருந்து காவோ சுபர் முகாமிற்கான விஜயத்தின் போதே மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட தளபதியினை காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை அளித்து படையினர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து குறித்த அமைதிகாக்கும் படையினரின் பணிகள் குறித்து ஐநா இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஷ் புலத்சிங்களவினால் ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.
அதன்பின், வருகை தந்த லெப்டினன் ஜெனரல், அங்குள்ள படையினரிடம் கலந்துரயைாடியதுடன் அவர்களுக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார். அவர் புறப்படுவதற்கு முன்னர், தளபதியவர்கள் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் அர்பணிப்பிற்காக பாராட்டுக் கடிதத்தையும் வழங்கினார்.