09th June 2022 15:09:16 Hours
புத்தளத்தில் அமைந்துள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 18 வது தளபதியாக வௌ்ளிக்கிழமை (3) அன்று பிரிகேடியர் விபுல இஹலகே தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அங்கு வருகையினை மேற்கொண்ட அவருக்கு தலைமையகத்தின் நுழைவு வாயிலில், இராணுவ மரபுகளின்படி முறையான பாதுகாவலர் அறிக் கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், பிரிகேடியர் விபுல இஹலகே, ‘ செத்பிரித்’ பிரணயங்களுக்கு மத்தியில், 58 வது படைப் பிரிவின் 18 வது படைத் தளபதியாக தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில் 581 வது பிரிகேட் தளபதி, கேணல் பொதுப் பணி, 58 வது படைப் பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பங்குபற்றினர்.
பிரிகேடியர் விபுல இஹலகே இந்த நியமனத்திற்கு முன்னர் மார்க்ஸ்மேன் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் தளபதியாக கடமையற்றினார்.
சிறப்புப் படையணியின் பிரிகேடியர் விபுல இஹலகே, 1989 ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து போரில் கடினமான அதிகாரியாக புகழ் பெற்றவர்.
தற்பொழுது பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பொதுப் பணி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்களுக்கு பதிலாக இவர் குறித்த இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.