08th June 2022 16:32:51 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் 15 வது தளபதியாக மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் 2022 ஜூன் 06 ஆம் திகதி பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பெறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியவர்கள், படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் பிரதான நுழைவாயிலில் வைத்து சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவருக்கு படையணியின் அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், புதிய தளபதி தனது அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உரையாற்றியதுன் குறித்த அவரின் உரையானது அனைத்து சமிக்ஞைப் படையணி முகாம்களுக்கும் வீடியோ தொழில் நுட்ப உதவியுடன் ஔிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற்றன.