08th June 2022 16:22:02 Hours
ஓய்வுபெறும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 14வது தளபதியான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் 35 வருடங்களுக்கும் மேலான முன்மாதிரியான சேவையின் பின்னர் தனது கடமைகளில் ஓய்வு பெறுவதற்கு முன்னர், 05 ஜூன் 2022 அன்று பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையகத்தில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் வைத்து இராணுவ மரபுகளுக்கு அமைவாக இராணுவ பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் நிலையத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகாவினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதைத் தொடர்ந்து, அதிகாரவனையற்ற அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்ற அனைவருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் அனைத்து சிப்பாய்கள் மத்தியில் உரையாற்றியதுடன் அனைவருக்குமான மதிய உணவின் போது படையணிக்கு வழங்கப்பட்ட அவரது புகழ்பெற்ற சேவையைப் பாராட்டும் வண்ணம் ஓய்வு பெறும் தளபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அலுவலகத்திலிருந்து பிரதான வாயில் வரை அவருக்கு மரியாதை செலுத்தினர். அதிகாரிகளின் உணவகத்தில் இரவு நேர உணவு வழங்கப்பட்டதையடுத்து அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்தது.