07th June 2022 20:07:25 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் அறிவுரைக்கமைய 05 ஜூன் 2022 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் வகையிலான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினருடன் இணைந்து பொது மக்களும் கரையோர பகுதிகளை தூய்மைப்படுத்திய அதேவேளை மயிலிட்டி கடற்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கடற்கரை அழகிற்கு மெருகூட்டினர்.
அதேநேரம் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். குடாநாட்டு மக்களுக்கு தென்னம் பிள்ளைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகளும் மர நடுகை வேலைத்திட்டங்களும் இடம்பெற்றன.