Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2022 21:13:18 Hours

10வது தேசிய பாதுகாப்பு படையணியினரால் நோயாளிகளுக்கு இரத்தானம்

14 வது படைப்பிரிவின் கீழுள்ள 144 வது பிரிகேடின் 10 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் 03 ஜூன் 2022 அன்று நாராஹேன்பிட்டி அபிமன்வர்ம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வில், 120 சிப்பாய்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடிதுவக்கு அவர்களின் அறிவுரைக்கமைய 10 வது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியவர்களின் மேற்பார்வையின் கீழ் பொது மக்களுக்கு உதவும் நோக்கில் படையினரால் மேற்படி இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நாராஹேன்பிட்டியிலுள்ள மத்திய இரத்த பரிமாற்ற நிலையனத்தின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.