Header

Sri Lanka Army

Defender of the Nation

16th March 2022 13:22:24 Hours

மேலும் ஒரு சிறந்த போர்வீரர் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஓய்வு

68 வது படைப்பிரிவின் தளபதியான இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார 34 வருடங்களுக்கும் மேலான உன்னதமான சேவையை நிறைவுசெய்துடன் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் தருவாயில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் திங்கட்கிழமை (14) இராணுவத் தலைமையகத்தின் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடனான கலந்துரையாடலின் போது பல்வேறு பதவிகளில் அர்ப்பணிப்பு மற்றும் அவரது பணிகளைப் பாராட்டியதுடன், அவரது விசுவாசம் மற்றும் நேர்மையைப் பற்றி உயர்வாகப் பேசினார்.

இராணுவத் தளபதி அவரிடம் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்வில் கலந்துகொண்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதே சந்தர்ப்பத்தில் கேகாலை பாலிகா வித்தியாலயத்தில் படிக்கும் அவரது மகள் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் உருவப்படத்தை சித்திரமாக வரைந்து பரிசளிபத்தார். இதனை பெற்றுக் கொண்ட இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓர் தந்தையாக அரவணைப்பைக் காட்டியதுடன் அவரது படைப்புப் பணியைப் பாராட்டியதுடன், நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இரு குழந்தைகளிடமும் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார், மேலும் இருவரின் எதிர்கால முயற்சிகளும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். நாட்டின் நலனுக்காக சிரேஷ்ட அதிகாரி போர்க்களத்தில் இருந்தபோது அவரது மனைவி திருமதி கீர்த்தி பண்டார ஆற்றிய பங்கையும் அவர் பாராட்டினார். ஒரு இல்லத்தரசியாக, உங்கள் கணவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் இந்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் மிகவும் சவாலான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள், இது பெரிய அர்ப்பணிப்பாகும் என்று தளபதி குறிப்பிட்டார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத் தளபதியிடமிருந்து தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கம் பற்றிக் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களின் விபரம் இங்கே;

1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில் பிறந்த அவர், குருநாகல் புனித அன்னாள் கல்லூரி மற்றும் தோலங்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய கல்லூரி ஆகியவற்றின் சிறந்த உருவாக்கம் ஆனார்.

இளம் மற்றும் ஆற்றல் மிக்க கீர்த்தி பண்டார, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 29 வது நிரந்தர படநெறியின் ஊடாக உலகப் புகழ்பெற்ற தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் நிரந்தர படையணி பயிலிளவல் அதிகாரியாக பயிற்சியைப் பெற்றார்.

1989 டிசம்பர் மாதம் 16 ம் திகதி அவர் இரண்டாவது லெப்டினனாக அதிகாரவாணை வழங்கப்பட்டு 6 வது இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, இலங்கை சிங்கப் படையணியின் 6 வது படையலகின் புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, அணி கட்டளையாளர் மற்றும் நடவடிக்கை மற்றும் பயிற்சி அதிகாரி போன்ற குறிப்பிடத்தக்க நியமனங்களை வகிக்கும் கௌரவத்தையும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்லூரியில் தனது மூன்று வருட சேவையில் கன்னோருவை அணியின் பயிற்றுவிப்பு அதிகாரிகவும், அணி கட்டளை அதிகாரியாகவும் விலைமதிப்பற்ற சேவையின் போது, இலங்கை இராணுவத்திற்கு பல அதிகாரிகளை சீர்படுத்தும் பொறுப்பை வகித்துள்ளார்.

இந்த முயற்சியில் முன்னோடி உறுப்பினராக, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்லூரிக்கு பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, பல மாணவர்களின் மற்றும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலத்திற்கு மதிப்பு சேர்க்கும் வகையில், அவதானிப்புகளின் பின்னணியில் அவர் பாகிஸ்தானில் ஒரு அறிமுக ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆணையிறவில் சேவையாற்றிய மறக்க முடியாத காலப்பகுதியில், தாய் நாட்டிற்காக உயிர் நீத்த கோப்ரல் காமினி குலரத்னவின் வீரச் செயலை நேரில் கண்ட சாட்சியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேஜர் ஜெனரல் பண்டார, யாழ்ப்பாணத்தில் ஜெயசிகுரு, ஜெயசக்தி, பலவேகய I (ஒன்று), இரண்டாம் (இரண்டு), வெலிஓயாவில் ஹயே பஹரா, துரகமன, மன்னாரில் கிரீன் பெல்ட் நடவடிக்கை, ரிவிகிரண, யாழ்ப்பாணத்தில் அக்னிகீலா, ரிவிராச II, போன்ற நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெருமளவில் பங்களித்துள்ளார். வன்னிவிக்கிரம II, சத் ஜயா மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் இறுதி மனிதாபிமான நடவடிக்கைகளில் இவர் கலந்து கொண்டார்.

அவரது துணிச்சல் மற்றும் சிறந்த செயல்திறனுக்கான அங்கீகாரமாக, போர்க்களத்தில் அவரது விதிவிலக்கான வீரத்திற்காக புகழ்பெற்ற "ரண சூர பதக்கம்" அவருக்கு வழங்கப்பட்டது. இராணுவத்தில் அவரது களங்கமற்ற சேவைக்காக அவருக்கு "உத்தம சேவா பதக்கம்" விருதும் வழங்கப்பட்டது. மேலும், மேஜர் ஜெனரல் பண்டாரவின் புகழ்பெற்ற, முன்மாதிரியான மற்றும் விசுவாசமான சேவை இலங்கை இராணுவம் மற்றும் நீட்டிப்பு மூலம், பிரசாரம் மற்றும் செயல்பாட்டு சேவை பதக்கங்களுக்கு மேலதிகமாக இலங்கை இராணுவத்தின் நீண்ட சேவை பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில், சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கு இராணுவப் மேற்பார்வையாளராக பணியாற்ற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் இந்த துறையில் அவரது மதிப்புமிக்க நிபுணத்துவத்தின் அடிப்படையில் நீண்ட மற்றும் கவனமாக ஆய்வு செயல்முறையைத் தொடர்ந்து அவர் இந்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டார்.

2008 முதல் 2010 வரையான காலப்பகுதியில், முதலாவது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியாக தொப்பிகலையில் இருந்து ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் நடவடிக்கை முடியும் வரை கிழக்கு மற்றும் வன்னி போர்முனைகளில் மனிதாபிமான நடவடிக்கையின் போது படையணிக்கு தலைமை தாங்கினார்.

அவரது இராணுவ வாழ்க்கையில், அவர் 141, 581 மற்றும் 541 வது பிரிகேட்களுக்கு தளபதியாகவும். 141 வது பிரிகேடில் இருந்தபோது படை விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளராகவும், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் பொதுப் பணியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார பல அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார்:

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் இளம் உத்தியோகத்தர் பாடநெறி, மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலை மற்றும் ஊவா குடாஓயா கமாண்டோ படையணியின் பயிற்சிப் பாடசாலை, மோட்டார் போக்குவரத்து உத்தியோகத்தர் கற்கைநெறி, கன்னொருவை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி பாடசாலையில் அடிப்படை பாராசூட் பாடநெறி, ஊவா குடாஓயா கமாண்டோ முகாமைத்துவப் பயிற்சி பாடசாலை,. மொரட்டுவா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீ பாலி வளாகம், பங்களாதேஷில் அதிகாரி ஆயுதப் பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் கனிஸ்ட கட்டளைப் பாடநெறி, அர்ஜென்டினாவில் அடிப்படை இராணுவப் மேற்பார்வையாளர் பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி மற்றும் அமெரிக்கா ஹவாயில் பயங்கரவாத பாடநெறிக்கான விரிவான பாதுகாப்புப் பதில் முதலியன அடங்கும்

மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு இராணுவத்தினராலும் கூட்டாக நடத்தப்பட்ட 'மித்ர சக்தி கூட்டுப் பயிற்சியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பாதுகாப்பு முன்னணியில் தனது அலங்கரிக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் தகைமைகளுக்கு மேலதிகமாக, மேஜர் ஜெனரல் பண்டார தன்னை ஒரு பல்துறை கல்வியாளராக நிரூபித்துள்ளார் மற்றும் தற்போது இலங்கையின் புகழ்பெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்வாக நிறுவனத்தில் ஆளனி முகாமைத்துவ துறையில் தனது முதுகலைப் பட்டத்திற்காக படித்து வருகிறார்.

அவர் திருமதி ஸ்வர்ணலதா பண்டிதரத்ன பண்டாரவை மணந்தார். திருமதி பண்டார கேகாலை புஸ்ஸல்ல மகா வித்தியாலயத்தில் உப அதிபராக கடமையாற்றுகிறார். அவர்களுக்கு இரண்டு மகள்மார் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.