08th March 2022 08:52:31 Hours
மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் பல்வேறு துறைகளில் வெற்றிகானும் பெண்களின் சாதனைகளைக் குறிக்கிறதுடன் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. மற்றும் பெண்களின் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாலின சமத்துவத்திற்கான பரப்புரைகள் ஏற்படுத்துகிறது.
சேவா வனிதா தலைவர், தலைவர்கள், மூத்த மகளிர் அதிகாரிகள், பணிப்பாளர்கள், ஐ.நா அமைதிகாக்கும் படையினர், ஐ.நா கண்காணிப்பாளர்கள், சிறப்பு மகளிர் நடவடிக்கை குழுக்கள், கண்ணிவெடி அகற்றும் பெண்கள், ரைடர் அணிகள், ஸ்கைடைவர்ஸ், விளையாட்டு சாதனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் , இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியில் உள்ள நிர்வாகிகள், சேவை படையணி பங்களிப்பாளர்கள், பொறியாளர் சேவைகள், இலங்கை பொறியாளர்கள், சமிக்ஞை, சட்டம் மற்றும் கணக்கியல் வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்கள், ஆங்கில பயிற்றுவிப்பாளர்கள், மொழி மொழிபெயர்ப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏனைய பல சேவைகளை முன்னெடுக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் இலங்கை இராணுவத்தில் பரந்தளவிலான பங்களிப்பை வழங்குவதுடன் அவர்கள் இணைந்து பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை குறிக்கும் இந்த சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றனர் என சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துகள் மற்றும் வாழ்த்துகள் அடங்கிய சுருக்கமான செய்தியில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகளைக் கொண்டாடவும், பெண்களின் சமத்துவத்திற்காக அணிதிரள்வதற்காகவும் மற்றும் பெண்களின் சமத்துவம், பாகுபாட்டில் இருந்து விடுபடல் , ஒரே மாதிரியான மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் மூலம் பெண்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக “பாகுபாட்டினை நிறுத்துவோம்” என்ற கருப்பொருளில் 2022 இவ் வருட மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் இராணுவ சேவை வனிதயர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த தினத்தை முன்னிட்டு பனாகொடவில் விரிவான "செனெஹசே கெதெல்ல" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது, இராணுவத்தின் 350 மகளிர் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் மகளிர் சிப்பாய்கள் மருத்துவத் தேவைகள், வீடுகள்/கட்டுமானத் தேவைகள் மற்றும் பெண் சிப்பாய்களின் இதர தேவைகளுக்கு பண உதவிகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அங்கு இசை பொழுதுபோக்கு முக்கிய நிகழ்ச்சியுடன் இணையவுள்ளனர்.இராணுவ சேவை வனிதயர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (8) காலை பனாகொடவில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இராணுவ 'மகளிர் தின' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.