08th February 2022 18:00:32 Hours
சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.