05th February 2022 22:15:24 Hours
தியத்தலாவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இருவர் (5) காலை, பதுளை ஓஹியா மற்றும் இடல்கஷின்னா இடையே 32வது சுரங்கப் பகுதியில் ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது, ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பிரான்ஸ் பெண் சுற்றுலாப் பயணியை பார்வையிட தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு சென்றனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் பணிப்பின் பேரில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் குமுது வடுகொட மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார ஒருங்கிணைப்பாளர் மேஜர் அசித ரணதிலக ஆகியோர் திருமதி சலின் சொலனய் (26) அவர்களைப் பார்வையிட்டனர். அவர் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற விபத்தில் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஹப்புத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இரு அதிகாரிகளும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்கினர் மற்றும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள். அவரது காயம் குறித்து இராணுவத்தினர் மற்றும் பொதுவாக இலங்கையர்களின் அக்கறை மற்றும் ஆதரவினால் ஈர்க்கப்பட்ட அவர், பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டதையும் அந்த அதிகாரிகளின் வருகையையும் நினைவுபடுத்தும் வகையில் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.