05th February 2022 22:20:22 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர்கள் சமூக சேவை ஆர்வலர் ஒருவரின் அனுசரணையுடன் புதன்கிழமை (2) மட்டக்களப்பு மங்களகம விகாரையில் 60 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
நிகழ்வில் 23 வது படைப்பிரிவினரின் அழைப்பின் பேரில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இத்திட்டத்தில் உளவியல் விரிவுரை ஒன்றினை திருமதி துலாஞ்சி சமல்கா வழங்கினார். மேலும் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்வதற்கு 135/A கெமுனுபுர கிராம உத்தியோகத்தரின் (அரசு அதிகாரிகள்) ஒத்துழைப்பு பெறப்பட்டது.
23 வது படைப்பிரிவின் தளபதி, 231 வது பிரிகேட் தளபதி மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி உட்பட சில சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.