25th January 2022 22:29:14 Hours
மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்புப் பகுதி புதிய தளபதியாகப் அநுராதபுரத்தில் உள்ள முன்னரங்க பாதுகாப்பு பகுதி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (21) பதவியேற்றார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய புதிய முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதிக்கு தலைமையக வளாகத்திற்குள் வருகை தந்த போது பாதுகாவலர் அறிக்ககையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து வண.ஈத்தலவெதுனவாவே ஞானதிலக தேரர் தலைமையிலான மகாசங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் எம்.ஈ.பி வீரசிங்க புதிய அலுவலகத்தை பொறுப்பேற்பதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், புதிய முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தலைமையக தளபதி படையினருக்கு ஆற்றிய உரையின் போது தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.