19th January 2022 21:04:30 Hours
திருமதி கீதா அத்துகோரள தலைமையிலான கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவு மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இணைந்து கெமுனு ஹேவா படையணியை சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சுகயினமற்ற இரண்டு மகள்களுக்கு ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் 5000 ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளனர்.
திருமதி கீதா அத்துகோரள மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் 04 ஜனவரி 2022 அன்று சிப்பாயின் வீட்டிற்குச் சென்று சில அத்தியாவசியப் பாடசாலை எழுதுபொருட்களுடன் முதல் மாதத் தவணையை ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்துவதற்காக சுமார் 20,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளையும் ஒப்படைத்தனர்.