07th January 2022 16:00:22 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அமெரிக்காவை வசிப்பிடமாக கொண்ட இரு இலங்கையர்களின் அனுசரனையினால் கொழும்புத்துறை, வல்வெட்டித்துறை மற்றும் அராலி-கொடிக்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு புத்தாண்டு பரிசாக 100 உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை திங்கட்கிழமை (3) வழங்கப்பட்டது.
அமெரிக்காவினை வசிப்பிடமாக கொண்ட வைத்தியர் சுகுமார் மற்றும் ஆன் நாகேந்திரன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் அந்த பகுதிகளில் உள்ள வறிய மக்களின் துயரங்களை கருத்தில் கொண்டு, இந்த சமூகத் திட்டத்திற்கு அனுசரணையை வழங்கினர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் பணிப்புரையின் பேரில் 51 வது, 52 வது மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 11 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 12 வது கெமுனு ஹேவா படையினர் நிவாரண பொதிகளை இராணுவ வாகனங்களில் அவர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் சென்று விநியோகிப்பதில் கலந்து கொண்டனர்.
51 , 52 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் தளபதிகள் படையினர் ஊடாக தமது ஆதரவை வழங்கினர்.