Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2022 15:00:22 Hours

பசளை உற்பத்தி தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட் சேதன பசளை உற்பத்திக்குத் தயாராக உள்ள விவசாய மற்றும் விவசாயிகள் உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் ஒன்றினை புதன்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தலைமையிலான இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர், 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, கட்டளை அதிகாரிகள், 231 வது பிரிகேட் பணிநிலை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஓராண்டுக்கான சேதனை பசளை தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் வருகை தந்திருந்த அனைவரும் களப்பயணத்தை மேற்கொண்டதுடன் சந்திவெளி பிரதேசத்தில் ஒன்றிரண்டு சேதனை பசளை உற்பத்தி செய்யும் இடங்களை பார்வையிட்டனர்.