06th January 2022 05:53:36 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 வது படைப்பிரிவின் 682 வது பிரிகேட் தலைமையகத்தினரால் சேதன பசளை உற்பத்தியை பொதுமக்களுக்கு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 'கைவேலி செல்வர் பாக்கியலிங்கம்' பண்ணையில் வியாழக்கிழமை (30) விசேட செயலமர்வு நடாத்தப்பட்டது.
682 வது பிரிகேட் பகுதியிலுள்ள 18 விவசாயிகள் அடங்கிய குழுவிற்கு பிரதேசத்தின் விவசாய நிபுணர்களால் நடாத்தப்பட்ட இந்த செயலமர்வில் 682 வது பிரிகேட் தலைமையக வளாகத்திற்குள் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இராணுவ படையினர் பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் கிளிநொச்சி 57 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு செயலமர்வு வெள்ளிக்கிழமை (24) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.
விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் இவ் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.