05th January 2022 08:52:39 Hours
இலங்கை மகளிர் படையணிக்கான களப் பொறியியல் அடிப்படை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியின் நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள களப் பொறியியலாளர் படையணியில் வியாழக்கிழமை (30) ஆரம்பமானது.
இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையணியினரால் மகளிர் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட முதலாவது மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி இதுவாகும்.
களப் பொறியியல் அடிப்படை மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியில் இலங்கை மகளிர் படையணியின் 2 மகளிர் அதிகாரிகள் மற்றும் 30 மகளிர் சிப்பாய்கள் கலந்துகொண்டுள்ளதுடன், 3 வார கால பாடநெறியின் நோக்கமானது, இலங்கை இராணுவத்தின் எதிர்கால முயற்சிகள் விரும்பிய இலக்குகளை அடைவதற்காக செயற்பாட்டு எல்லைகளை அறிந்துகொள்வதாகும்.
களப் பொறியியலாளர் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் டி.பி ஜயசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் களப் பொறியியலாளர் படையணியின் அனைத்துப் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.