05th January 2022 08:57:08 Hours
அண்மையில் பெய்த கனமழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு 6 வது இலங்கை கவசப் வாகன படையினரால் வெள்ளிக்கிழமை (31) மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி சீரமைப்பு செய்யப்பட்டது.
இந்த விடயம் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து 22 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரேவினால் 223 வது பிரிகேட் தளபதிக்கு உடனடியாக படையினருடன் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார்.
223 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீக குலசேகர, 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.ஏ.ஆர். விஜேரத்ன, மற்றும் படையினர் இந்த சீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.