29th December 2021 12:11:31 Hours
கெவிலியமடு பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு 231 வது பிரிகேட்டின் ஒருங்கிணைப்புடன், ஹேமாஸ் ஹோல்டிங் பிஎல்சியின் தனியார் நிறுவன ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷிரோமி மாஸ்கொரல அவர்களின் அனுசரணையுடன் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச உலர் உணவுப் பொதிகள் கெவிலியமடு சுனேத்ராராமய விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கப்பட்டன.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிசி அவர்கள் 231 வது பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி முகாமுக்கு தனது முதல் கள விஜயத்தின் போது இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டாரவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலா ரூபா 4000 பெறுமதியான இந்த நிவாரணப் பொதிகளில் அரிசி, பருப்பு, மசாலா, பால் மா, வெங்காயம், நெத்தலி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன.
23 வது படைப்பிரிவின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி , 231 வது பிரிகேட் தளபதி, 231 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.