Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2021 14:10:23 Hours

சேவையிலிருந்து ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்களுக்கு பீரங்கி படையினரால் பிரியாவிடை

இலங்கையின் இராணுவ நிரந்தர படையில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வுபெறும் இலங்கை பீரங்கி படையணியின் 21 வது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் பீரங்கி படையினரால் பீரங்கி அதிகாரியாக சேவையிலிணைந்த மேற்படி அதிகாரிக்கான பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வானது போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி உயிர் நீத்த போர்வீரர்களை நினைவுகூறப்பட்தை தொடர்ந்து ஆரம்பமானதுடன், படையணி சிப்பாய்களால் ஓய்வுபெறவுள்ள தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜண்ட்களுக்கான புதிய விருந்தக கட்டிடத்தை திறந்து வைத்த அவர், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் புதிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய அவர் 06 வது பீரங்கி படையணியின் படையினர் விருந்தகத்தில் நடைபெற்ற அனைத்து நிலைகளுக்குமான விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

பிரியாவிடை நிகழ்வை மேலும் நினைவம்சங்கள் மிக்கதாக மாற்றும் வகையில் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் நிலையத் தளபதி அழைப்பின் பேரில் ஜெனரல் (ஓய்வு) சீ.எஸ் வீரசூரிய ஞாபகார்த்த கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நிறுவப்பட்ட பார்வை குறிப்பிட்ட ஒரு தொகை அதிகாரிகளின் பங்களிப்புடன் மாத்திரம் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, படையணியின் தளபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது கொவிட் – 19 வழிகாட்டல்களுக்கமைய நடைபெற்றது. மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் இராணுவ தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானியாகவும் நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.