24th December 2021 18:31:16 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவு தலைமையக படையினரால் சேதன பசளையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட “பசுமை இல்லம்” திட்டத்தில் கறிமிளகாய்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அறுவடை செய்யப்பட்டன.
66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களினால் சேதன பசளை பயன்படுத்தப்பட்ட விளை நிலப் பரப்பிற்குள் மேற்கொள்ளும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து 30 கிலோ கறி மிளகாய் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டம் வெற்றியளித்துள்ளமையால் கட்டளை அலகுகளிலும் பொருத்தமான பயிர்ச் செய்கையினை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய 66 வது படைப்பிரிவின் கீழ் உள்ள கட்டளை அலகுகளிலும் சேதன பசளை உற்பத்தி செய்யப்பட உள்ளதோடு அப்பகுதிகளிலும் நடுகைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டளை அமைப்புகளுக்கு படைப்பிரிவு தளபதியினால் மரக்கறி செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.